மாணவர்களின் கேம்பஸ் அம்பாஸிடர் மூலம் புதிய வாக்களர்களை பெயர் சேர்த்தல் குறித்த கூட்டம்

07/06/2017 கல்வி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவர்களின் கேம்பஸ் அம்பாஸிடர் (கல்லூரி வளாக தூதுவர்) மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் புதிய வாக்காளர்களை பெயர் சேர்த்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த ஆலேசணைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் 
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கல்லூரிகளில் முதலாமாண்டு படித்துவரும் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகளை வாக்காளராக சேர்த்திடும் பணி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 18-19 வயதைசேர்ந்தவர்கள் 34.696 நபர்கள் உள்ளனர். இவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இப்பணியினை கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களில் ஒருவரை கேம்பஸ் அம்பாஸிடராக (கல்லூரி வளாக தூதுவர்) நியமிக்கப்பட்டு அதன் மூலம் புதிய மாணவர்களின் வருகை குறித்து கணக்கெடுத்து புதிய வாக்காளர் சேர்க்கைக்காக இணையதளம் மூலம் பதிவு செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்று வழங்குவதே கேம்பஸ் அம்பாஸிடர்களின் முக்கிய பணியாகும்.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்நீக்கல்திருத்தம் செய்தல் தொடர்பான பணிகள் 01.07.2017 முதல் 31.07.2017 வரை நடைபெற்று வருகின்றன. 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. கல்லூரிகளுக்காக 12.07.2017 மற்றும் 19.07.2017 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தபட உள்ளன இம்முகாம்களை பயன்படுத்தி கல்லூரிகள் அளவிலான கேம்பஸ் அம்பாஸிடர்கள் இப்பணிகளை மேற்கொள்ளும்பொழுது திட்டமிட்டு செயல்பட்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் ஒருவர்கூட விடுபடாமல் எல்லோரும் வாக்காளராக உள்ளார்கள் என்ற நிலையை உறுதிபடுத்துவதே உங்களது சிறப்பான பணியாகும். என   மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ்இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.