இன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை
இன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை!
➠ இன்று முதல் தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் பெப்சி, கோக் விற்பனை இல்லை என்று வணிகர் சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
➠ மார்ச் முதல் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடைகளிலும் பெப்சி, கோக் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு குளிர் பானங்கள் விற்பனை செய்ய மாட்டாது என வணிகர் சங்கங்கள் அறிவிப்பு ஆனது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
➠ ஜல்லிகட்டிற்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய, வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தினர்.
➠ இதை தொடர்ந்து வியாபாரிகள் சங்கம், தாங்களாகவே முன் வந்து, மார்ச்-1 முதல் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என்று அறிவித்தது.
➠ மேலும் பிப்ரவரி மாதம் முழுவதும் இது சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்படும் எனவும் அறிவித்தனர்.
➠ வணிகர் சங்கங்களின் இந்த அறிவிப்புக்கு, மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. சமூக வலைதளங்களில் இளைஞர்களும், வெளிநாட்டு குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்குமாறு, தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
➠ தற்போது இந்த சூழலில், இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் என வணிகர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
➠ இது தொடர்பாக விக்கிரம ராஜா (தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர்) செய்தியாளர்களிடம் பேசியது, வெளிநாட்டு குளிர்பான விற்பனைக்கு தடை என்ற முடிவில், வியாபாரிகளுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் திடீரென ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் பொது மக்களிடம் இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.
➠ ஆனாலும் இன்று முதல் வெளிநாட்டு குளிர்பனங்கள் விற்பனை நிறுத்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.
➠ இன்று முதல் கடைகளில், 'வெளி நாட்டு குளிர்பானங்கள் விற்பதில்லை" என்ற கடைகளில் விளம்பர பலகை வைக்கப்படும். என்றும் விக்கிரம ராஜா தெரிவித்தார்.