கரூரில் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் விழா
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி மலையகவுண்டன்குளத்தில் இன்று 21.07.2017 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ் இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணயினை தொடங்கி வைத்தாதவது.
கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 04.10.2017 அன்று புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவதையொட்டி இடைப்பட்ட காலங்களில் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து பொதுமக்களுக்கும், சமூக நலனுக்கும் முக்கியத்துவதும் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையும், துறை சார்ந்த பணிகளை தொடர்ந்து செவ்வனை செய்து வருகின்றனர். அதனையொட்டி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக குளித்தலை ஊராட்சி ஒன்றியம், நல்லுர் ஊராட்சி மலையகவுண்டன்குளத்தில் 400 வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கன்றுகள் நடுவு செய்யும் பணிகள் முடிவுற்ற பின் அனைத்து கன்றுகளையும் பாதுகாப்பாக பராமரித்து வளர்த்திடவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.