தேங்காய் மாதிரி மனசு


* படித்தால் மட்டும் போதாது. பண்புடன் நடப்பது அவசியம். பண்பாடு கொண்டவனே மனிதனாக கருதத்தக்கவன்.
* நன்மையின் பாதை செல்லச் செல்ல விரிவாக இருக்கும். தீமையின் பாதையோ செல்லச் செல்ல குறுகி விடும்.
* கடவுளின் கருணையைப் பெற, வெறுமனே அவரை வழிபடுவது மட்டும் வழியல்ல. துன்பப்படும் உயிர்களிடம் கருணை காட்டுவதே கடவுளின் கருணையை நமக்குப் பெற்றுத்தரும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் உடைக்கும் போது, அது வெள்ளையாக இருப்பதைக் காண்கிறோம் இல்லையா! அதுபோல், மாசுபடும் மனதையும் வெள்ளையாக வைத்துக் கொள்ள வேண்டும். 
* பெரியவர்கள், நல்லவர்களைக் கேலி பேசுவதும், அலட்சியம் செய்வதும் தகாத செயல். இதற்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
* விளைந்த நெற்கதிர் பணிந்து தலை தாழ்வது போல, செல்வந்தர்களும் பணிவுடன் வாழ வேண்டும்.
- வாரியார்