மலச்சிக்கல் நீக்கும் எளிய முறை


நமக்கு உடல் நலம் சரியில்லாத நேரங்களில் மருத்துவரை அனுகும் போது மருத்துவர் கேட்க்கும் முத்ற்கேள்வி மலம் சரியாக வெளியேறுகிறதா என்றுதான். நோய்களின் முதற்காரணம் மலச்சிக்கல் என்பதை நாம் அறியவேண்டும்.

ஒருவன் உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்தபின் உண்டால்,அவன் உடலுக்கு மருந்து எதுவும் தேவைவில்லை என்பதாகும்.
முன்னே நாம் உண்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்டது என்று அறிந்தபின்பு, நாம் உண்ணத்தகுந்த உணவினை அளவோடு உண்ண வேண்டும்.

சைவ உணவுகளை உண்பவர்கள் குறிப்பாக காயகறிகளை அதிகம் உண்பவர்கள் மலச்சிக்கலால் பாதிப்படைவதில்லை ஆனால் புரதம் அதிகம் கொண்ட மாமிச உணவுவகைகளை உண்பவர்கள் மலச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.